மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு மூத்த உறுப்பினர் காயம்
Read Time:1 Minute, 4 Second
மட்டக்களப்பு நகரில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று (01.06.2006) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கந்தையா அருமைலிங்கம் (வயது 64) காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். காலையில் மலசல கூடத்திற்குச் சென்ற வேளையில் அப்பகுதியில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்ட இவர் இப்போது கல்லடியில் வசித்து வந்தார்.