எமது விமானப்படை உலகில் சிறந்தது -சீனன்குடாவில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு
எமது விமானப்படை உலகிலேயே சிறந்தது எனக்கூறினால் கூட அது மிகையாகாது இவ்வாறான சக்திவாய்ந்த விமானப்படை ஒன்றை உருவாக்கிய பெருமை அதன் உயர் அதகாரிகளையே சாரும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமானப்படைப் பயிற்சியை முடித்து வெளியேறிய வீரர்களுக்கு பட்டமளித்து கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று சீனன்குடாவில் நேற்று இடம்பெற்றது இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார் இதில் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் அதற்கு எதிராக யுத்தம் புரிந்த விமானப்படை வீரர்களுக்கும் படையில் சேர அனுமதித்த அவர்களது பெற்றோருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எமது விமானப்படை உலகிலேயே சிறந்தது எனக் கூறினால் கூட அது மிகையாகாது இவ்வாறான சக்திவாய்ந்த விமானப்படை ஒன்றை உருவாக்கிய பெருமை அதன் உயர் அதிகாரிகளையே சாரும் விஷேடமாக வவுனியா மற்றும் திருகோணமலை பகுதியைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் எமது விமானப்படையினர் அளப்பரிய சேவைகள் ஆற்றி வருகின்றனர். கடந்த 30வருடகாலமாக நாட்டில் பயங்கரவாதம் நிலவி வந்தது இன்று அந்நிலை ஒழிக்கப்பட்டு விட்டது மீண்டும் அவ்வாறான ஒரு சூழல் உருவாகாதிருக்க நாம் வழி சமைக்கவேண்டும் உயர் அதிகாரிகளின் கட்டளைக்கமைய தமது சேவையை உரிய வகையில் செய்யவேண்டிய கடப்பாடு அனைத்து வீரர்களுக்கும் உள்ளது என்றார்.
3 thoughts on “எமது விமானப்படை உலகில் சிறந்தது -சீனன்குடாவில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
nalla solurankal.poddaikal.
இந்தியன் உதவிசெய்யமுதல் எத்தனை விமானஙகளை இழந்தனீர்கள்?
மறந்துபோச்சா??
Yes. Now they have better Air Force in the world and they can, not only fight against U.S.A. but against India also if they try to be funny with them.