த.தே.கூ.வின் முஸ்லிம் உறுப்பினர்கள் கட்சி தாவத் தயார்: அமைச்சர் முரளிதரன்
யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு விரும்புகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி. வடக்கு – கிழக்கில் உள்ள எமது சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்ற நாம் விரும்பினால் எமது சமூகத்திடம் இருந்து எம்மால் முடிந்த ஆதரவை நாம் திரட்டி சேமித்துக் கொள்ள வேண்டும் என்றார் முரளிதரன். உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமானால் சிறுபான்மையினர் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகள் அரசுக்கு சிறப்பான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் முரளிதரன் தெரிவித்தார். எதிர்த் தரப்பு இருக்கைகளில் ஒரு சிலர் அமர்ந்திருப்பதிலும் ஏனையவர்கள் வேறு கட்சிகளில் இருப்பதிலும் எந்தப் பயனும் கிடையாது. நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என முரளிதரன் மேலும் கூறினார்.
Average Rating