தென் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள்

Read Time:1 Minute, 51 Second

தென் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மாத்தறை மாவட்டத்தில் இன்றையதினம் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றையதினம் காலி மாவட்டத்தில் ஒரு அரசியல்கட்சி மாத்திரமே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்ததாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் வரையில் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக்குழுவோ கட்டுப்பணத்தை செலுத்தவோ வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவோ இல்லையென்று தெரிவிக்கப்படுகின்றது. தென் மாகாணசபைத் தேர்தல்களுக்காக நேற்றையதினம் ஆரம்பமான வேட்புமனுத்தாக்கல் நடவடிக்கையானது எதிர்வரும் 28ம் திகதி நண்பகல் 12மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத்தாக்கல் தினம் முடிவடைந்தவுடன் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டும் -ஜெனரல் சரத்பொன்சேகா!
Next post விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-4)