மொனறாகலைப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை
Read Time:1 Minute, 10 Second
மொனறாகலைப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றதாக மொனறாகலைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணும் அவருடைய கணவரும் வீட்டில் இருந்த வேளையில் அங்குவந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இவர்களைக் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் குறித்த பெண் உயிரிழந்ததுடன், அவருடைய கணவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating