கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகளுக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளன -சிங்களப் பத்திரிகை
Read Time:1 Minute, 20 Second
கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமான நிலையத்திலேயே பத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை பயன்படுத்தியே எரித்திரிய விமானநிலையத் தரப்பு, விமானப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விமான நிலயத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரைப்பட்ட கேபி என்கிற செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Average Rating