பாதுகாப்புச் செயலாளரை இலக்குவைத்து கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தொகுதி ஒன்றை புலனாய்வுப்பிரிவினர் இன்று கொழும்பில் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர் மட்டக்குளிய முகத்துவாரம் பிரதேசத்திலேயே இந்த ஆயுததொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிமால் மெதிவகே தெரிpவித்துள்ளார். கட்டிடத்தொகுதி ஒன்றின் இரும்புப் பெட்டி ஒன்றிலேயே இந்த வெடிப்பொருட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டு;ள்ளார் இந்த வெடிப்பொருட்களை பொருத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றின் மூலம் பாதுகாப்பு செயலாளரின் வாகனத்தொடரணிக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச்செயலாளர் உயிரிழக்காத பட்சத்தில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் அம்புலன்ஸ் வானத்தை குறிவைத்து தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார் இதற்காக தற்கொலைக் குண்டுதாரியானபெண் ஒருவரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும்அவர் தெரிவித்தார் இந்த தாக்குதல் தொடர்பான திட்டங்களை தீட்டிய சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பாகவும் புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மட்டக்குளிய முகத்துவாரம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களுள் 5கிலோகிராம் எடையுள்ள தற்கொலை அங்கியொன்றும் நவீன தன்னியக்க துப்பாக்கி அதற்கான ரவைகள் கைகுண்டுகள் சைனட் குப்பிகள் தொலையியக்கிகள் டெட்டனேட்டர்கள் மற்றும் மின்கலங்கள் என்பனவும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்
Average Rating