நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
Read Time:1 Minute, 17 Second
நீர்கொழும்பு காவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்றுக் காலை 6.30 மணியளவில் ஆஸ்பத்திரியில் நான்காம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செயதுள்ளார் கட்டான பகுதியைச் சேர்ந்த பிரான்லிஸ் இமானுவேல் (வயது 54)என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷம் அருந்தியதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவரை மருத்துவர்கள் பெரும் சிரமத்தின் பின்னர் காப்பாற்றியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating