11மாதங்கள் நிரம்பிய குழந்தையை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்கமுற்பட்ட தாய் உள்ளிட்ட மூவர் கைது!!

Read Time:1 Minute, 36 Second

11மாதங்கள் நிரம்பிய குழந்தையொன்றை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்ய முற்பட்டதாகக் கூறப்படும் மாத்தறையின் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவிடயமாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை விற்கமுற்பட்டபோது இந்த மூவரும் இன்றுபிற்பகல் கொழும்பு புறநகரான இரத்மலானைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்படடுள்ளனர். குழந்தையின் தாய் குழந்தையை விலைக்கு வாங்குவதற்கு முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த தாய் கடந்தவருடம் இக்குழந்தையை ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்டபோது கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். விடயங்களைக் கவனத்தில் எடுத்த நீதிபதி சந்தேகநபர்களை அடுத்தமாதம் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக் கொள்வதே உண்மையான வெற்றி -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!
Next post விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஜெயரட்ணம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்!