காலி கடற்படை முகாம் மீது முன்பு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் புலிகளின் படகு ஹம்பாந்தோட்டையில் மீட்பு!!
Read Time:1 Minute, 18 Second
காலி கடற்படை முகாம் மீது விடுதலைப்புலிகளினால் நடத்திய தாக்குதலுக்கு பயன்படுத்திய வள்ளம் ஹம்பாந்தோட்டைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது 2006ம் ஆண்டு காலி கடற்படை முகாம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சிங்கள நபர்கள் மற்றும் விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ட்ரோலர் மீன்பிடி படகு 30லட்ச ரூபாவிற்கு சிங்களவர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் பின்னர் குறித்த ட்ரோலர் படகு முஸ்லிம்நபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியிலிருந்தே கடற்படை முகாம் மீதான தாக்குதல் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Average Rating