வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதகுமார் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு
வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுமார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்கஅதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்திருந்தார். மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்த மதகுருமாரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க இந்து கலாசார திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 177 இந்துமத குருமார்களும், 06 கிறிஸ்தவ குருமார்களும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்துக் குருமாருடன் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 873பேர் அவர்களின் உறவினர்களிடமும், கத்தோலிக்க மதகுருமார் மன்னார் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating