மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் காதலரால் குத்திக்கொலை!

Read Time:1 Minute, 41 Second

மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் ருவர் அவரது காதலரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. றுகுணு பல்கலக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவியான இவர் தனியார் மருத்துவ நிலைம் ஒன்றில் தனது கடமை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் வைத்து அவரை வழிமறித்த காதலன் அவரை கத்தியால் குத்தியுள்ளார். 12வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணத்தை பின்தள்ளுமாறு காதலி கேட்டதால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவநேரம் காதலன் 26தடவைகள் கத்தியால் காதலியைக் குத்தியதாகவும், கத்தியால் குத்தும் போதும் நான் உன்னையே காதலிக்கிறேன் என குறித்த பெண் கூறியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. காதலி திருமணத்தை பின்போடுமாறு தெரிவித்து வந்ததால் அவள் வேறு யாரையோ காதலிப்பதாக சந்தேகம் கொண்டே காதலன் குத்தியதாகவும் தெரிய வருகிறது. சந்தேகநபர் கத்தியுடன் கம்புறுபிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியீடு!
Next post மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்..