தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் சமர்ப்பிப்பு!

Read Time:3 Minute, 10 Second

தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் கையளிக்கப்பட உள்ளன. மூன்று மவாட்டங்களுக்குமான ஐ.ம.சு. முன்னணியின் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு காலிமாவட்ட குழுத்தலைவராக முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் சில்வாவும் மாத்தறை மாவட்ட குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஹேமால் குணசேகரவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குழுத்தலைவராக முன்னாள் அமைச்சர் வி.கே. இந்திகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, தென் மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி பட்டியலில் போட்டியிடுவதற்கு பெருமளவு வேட்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இரு மாவட்டங்களுக்கான வேட்புமனு நேற்று முன்தினம் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு எஞ்சிய மாவட்ட பணிகள் நேற்று பூர்த்தி செய்ய ஏற்பாடாகியிருந்தது. இன்று மூன்று மாவட்டங்களுக்கும் ஐ.ம.சு.மு. வேட்புமனுக்களை கையளிக்கும். ஐ.ம.சு.முன்னணி பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், கலைஞர்கள், படைவீரர்கள் உட்பட பலதரப்பினரும் போட்டியிடுகின்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தொடங்கிய வெற்றிப்பயணம் தென்மாகாண தேர்தல்வரை தொடரவுள்ளது. இந்தத் தேர்தல் 80 வீதத்திற்கும் 85 வீதத்திற்கும் இடைப்பட்ட வாக்கு வித்தியாசத்தில் ஐ.ம.சு. முன்னணி வெற்றியீட்டும். தாம் தேர்தலில் படுதோல்வி அடைவதை முன்கூட்டி உணர்ந்துள்ள ஐ.தே.க. சுயாதீன ஆணைக் குழுவை அமைத்து தேர்தல் நடத்துமாறு கோருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்கள் தேர்தல் ஆணைக்குழு இன்றியே நடைபெற்றன. தேர்தல் ஆணைக்குழு இல்லாத நிலையில்கூட தேர்தல்கள் சுயாதீனமாக நடத்தப்பட்டன. அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் சமர்ப்பிப்பு!

  1. கிழக்கில் தொடங்கிய ஊழல் தெற்குவரை தொடரப்போகுது. தனித்தனியாக நடாத்துவதே மிகப்பெரும் சான்று. மேலும், நாம் கண்கூடாகக் கண்டோம். உதாரணத்திற்கு; அக்கரைப்பற்றில் நூறு வீத்திற்கு மேல் வாக்களிக்கப்பட்டமை.

Leave a Reply

Previous post இரண்டரை ஆண்டுகளில் 14 பெண்களை மணந்த நபர்!
Next post பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை இலங்கைஅரசு நிராகரிப்பு