மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம்!
Read Time:1 Minute, 20 Second
இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம் ஒன்றை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர் இந்த முற்றுகையின் போது சந்தேகத்தின் பேரில் ஏழு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர் என கல்கிசைப் பொலிஸார் தெரிவித்தனர். மஸாஜ் கிளினிக் என்ற அங்கீகாரத்துடன் இரகசியமாக விலைமாதர் இல்லம் ஒன்றை நடாத்தி வந்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். கல்கிஸ்சை நீதவான் இவர்கள் அனைவரையும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் இரத்தினபுரி குருணாகல் பொல்கஹவளை மத்துகம போன்ற பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கல்கிசை டி.சேரம் வீதியில் உள்ள இந்த மஸாஜ் கிளினிக்கிலேயே மேற்படி விலைமாதர் தொழிலை மேற்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
Average Rating