சம்பள உயர்வு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்..!
இவ்வருடத்துக்கான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் இன்று 28ம் திகதி நடத்தவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய நாடுமுழுவதிலும் பணிபுரியும் மின்சார சபை ஊழியர்கள் நேற்று நள்ளிரவு 12.00மணி தொடக்கம் இன்றிரவு 12.00மணிவரையும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் எனத் தொழிற் சங்கத்தின் நடவடிக்கை குழு அங்கத்தவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் இயங்கும் மின்சாரசபை அலுவலகங்களிலும் டிப்போக்களிலும் சாதாரண கடமைகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டுள்ள சகலரும் இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை நேற்று முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் அத்தியாவசிய பொதுச்சேவையை கருதி தொடர்ந்தும் செயற்திறன் மிக்க சேவையை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating