இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் ஜேர்மனியில் உள்ள சிங்கள புலிகளாலேயே விநியோகம்..

Read Time:1 Minute, 33 Second

canal4_2இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை ஜேர்மனியில் உள்ள சிங்கள விடுதலைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்வதாக சித்தரிக்கும் போலியான காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ஜேர்மனியில் உள்ள ஐந்து சிங்கள விடுதலைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர். இந்த வீடியோக் காட்சிகள் முழுக்க முழுக்க போலியானவை எனவும் இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜே.டி.எஸ் எனும் பெயருடைய அமைப்பே இவ்வாறான வீடியோக்களை விநியோகம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோக் காட்சிகள் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் புலிகளுக்கு சார்பான இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

8 thoughts on “இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் ஜேர்மனியில் உள்ள சிங்கள புலிகளாலேயே விநியோகம்..

  1. Please watch again, the 2nd Man is none other than PLOTE’s Senior Leader Faruk Annai!
    So this Massacre is not by SLA but by LTTE.

    Dear Readers, kindly recall that in Jan 09 when LTTE started to vacate their torture camps in Vanni they massacred a lot of Tamil youths who were in their custody.
    12.12.2005 அன்று சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். பாருக் மக்களுடன் பழகிய முறையாலும், மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து அந்த மக்களுக்காக உண்மையாக சேவையாற்றியவர் என்பதாலும் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா திருநாவற்குளம் பகுதி மக்கள் ஊர்வலமாக வைரவபுளியங்குளத்தில் உள்ள யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் பாருக்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்

  2. இலங்கையரசு இன்றும் இறைமையுள்ள அரசு!.

    புலிகள் அப்படியல்ல!!

    புலிகள் சொந்த மக்களையே பலி கொடுத்து பலி எடுத்து பணம் சேர்த்தவர்கள்!!!

    புலிகள் சர்வதேசிய ரீதியில் பயங்கரவாதிகள் என்று பட்டம் எடுத்தவர்கள்!!!

  3. வேதனைக்குரிய வீடியோ..
    கொல்லப்படுவது மாற்று இயக்கத்தினர் என்றும் கொலை செய்வது புலிகள் என்றும் இந்த வீடியோ வை பார்க்கும் போது அப்பட்டமாக தெரிகிறது..

    யாரோ……

    இறப்பது தமிழர் என்பது மட்டும் உண்மை…

  4. we (u) all saying and fighting for nothing..
    end of the day look at them life?
    can you see the last minute of them life??
    who ever it is they will pay for it>
    but not for long..

  5. எதிரியை விட துரோகிதான் ஆபத்தானவன் என்பதற்கு இதனைவிட மிகச்சிறந்த எடுத்துகாட்டு வேறுஎன்ன இருக்கமுடியும்? நக்கி தின்னும் இந்த தமிழ் துரோகிகளை விட அந்த மனிதபிமானமுள்ள சிங்களவர் எவ்வளவோ மேல்! இப்ப இந்த கொடுமையான வீடியோவிற்கு கூட புதிய கதைகளை அள்ளி விடுகிறாங்கள் படுபாவி தமிழ் துரோகிகள்!!!

  6. சொன்னதை சொன்ன படி நம்பும் புலம் பெயம் முட்டாள்கள் இருக்கும் வரை தமிழருக்கு விடிவு இல்லை…

    ராணுவத்தின் வன்முறைக்கு இந்த வீடியோ தேவையில்லை.. எல்லோருக்கும் தெரிந்த விடயம்…

    என்ன வித்தியாசம்…… இதை படமா பிடித்து போடுகினர்…. சகோதர கொலைகளை ஒருவரும் படம் பிடிக்க வில்லையே.

    முதலை வருது வருது எண்டு சொன்னது போல, இவங்கள் சொல்லும் ஒன்றையும் நம்ப முடியவில்லை.. அதற்கு நாம் காரணமில்லை… இந்த புலிகள் தான் காரணம்..

    பாதிரியார் பார்த்த உடல்கள், நிர்வாணமான பெண் புலி உடல்கள் என்று இவங்கள் பித்தலாட்டம் செய்ததால்தான் இதையும் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டி உள்ளது.. அந்த வரிசையில் இந்த வீடியோ வும் ஏன் இருக்க முடியாது?

    இந்த வீடியோ வை பார்க்கும் பொது, இராக்கில் திவிரவாதிகள் கழுத்து வெட்டி கொலை செய்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது… எனினும் முழுதாக அவர்களை குற்றம் சொல்ல முடியாது.. இன்னொரு நாட்டின் இறைமைக்குள் மூக்கை விட்ட அமெரிக்க நேச நாடுகளும் பதில் சொல்ல வேண்டும்..

    அது போல ஆரம்ப காலத்தில் இனவெறி பிடித்த சிங்களவன் , பின்னர் நாகரிகம் அடைந்து விட்ட போதிலும்…இன வெறியை மேலும் தூண்டி தமது பிழைப்பு நடத்திய புலிகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்…..

Leave a Reply

Previous post சம்பள உயர்வு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்..!
Next post மேலை நாடுகளிலிருந்து அணுஆயுதங்களை பெற முனைந்த புலிகள்!