களுவான்கேணியில் சுடப்பட்டவர் மீள்குடியேற்றவாசி எனத் தகவல்..!
Read Time:1 Minute, 13 Second
நேற்றுமுன்தினம் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர் வவுனியா நலன்புரி நிலையமொன்றில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் திரும்பியவர் எனத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது 27வயதான நடராஜா பாஸ்கரன் என்ற இந்த நபர் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது மீள்குடியேற்றத்திற்காக தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய பின்பு ஒருதடவை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் அவரது உறவினர்கள் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating