இந்திய முகவர் அமைப்பு விரைவில் பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இலங்கை விஜயம்!
Read Time:1 Minute, 25 Second
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக ராஜீவ் காந்தி படுகொலை குறித்த விசாரணைக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என புதிடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒரு வருட காலத்திற்கு தடை செய்துள்ளது. இந்த அமைப்பின் காலம் கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
Average Rating