52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது!
Read Time:1 Minute, 6 Second
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் நோக்கில் படகில் சென்றிருந்த 52பேர் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் மேலும் மூன்று படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கள் பிரவேசித்த 18படகுகள் மீட்கப்பட்டதாகவும், அந்தப் படகுகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் வருகை தந்ததாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறுகின்றது.
Average Rating