எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை -முன்னாள் இராணுவத் தளபதி!
தான் எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நான் ஒரு இராணுவவீரன், அரசியல்வாதி அல்லன். நான் இராணுவக் கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு சாதாரண இலங்கைப் பிரஜையாக மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். இராணுவத்தில் இருந்த காரணத்தால் வாழ்க்கையில் இழந்த சந்தோஷமான காலங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது. நான் அரசியலில் வெகுவிரைவில் ஈடுபடப்போகிறேன் என்று வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. நான் அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று எந்தப் பத்திரிகைகளுக்கும் மின்னஞ்சல்மூலம் அறிக்கைகள் அனுப்பிவைக்கவில்லை. முப்படைகளின் பிரதான அதிகாரியாகப் பொறுப்புடன் உயர்பதவி வகிக்கும் நான் அப்படியொரு அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் அளவுக்கு முட்டாள் அல்லன். எனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமோ, நோக்கமோ கிடையாது. எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது என்று வெளியாகியிருக்கும் செய்திகளிலும் உண்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating