எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை -முன்னாள் இராணுவத் தளபதி!

Read Time:2 Minute, 0 Second

தான் எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நான் ஒரு இராணுவவீரன், அரசியல்வாதி அல்லன். நான் இராணுவக் கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு சாதாரண இலங்கைப் பிரஜையாக மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். இராணுவத்தில் இருந்த காரணத்தால் வாழ்க்கையில் இழந்த சந்தோஷமான காலங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது. நான் அரசியலில் வெகுவிரைவில் ஈடுபடப்போகிறேன் என்று வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. நான் அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று எந்தப் பத்திரிகைகளுக்கும் மின்னஞ்சல்மூலம் அறிக்கைகள் அனுப்பிவைக்கவில்லை. முப்படைகளின் பிரதான அதிகாரியாகப் பொறுப்புடன் உயர்பதவி வகிக்கும் நான் அப்படியொரு அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் அளவுக்கு முட்டாள் அல்லன். எனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமோ, நோக்கமோ கிடையாது. எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது என்று வெளியாகியிருக்கும் செய்திகளிலும் உண்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கே.பி.யை விசாரிப்பதற்கும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி இந்திய மத்திய புலனாய்வுத்துறை அடுத்தமாதம் கொழும்புக்கு வரும்..!
Next post சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் அதிகரிப்பால் இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் -வெளிவிவகார அமைச்சர்!