புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வைத்து கைது

Read Time:1 Minute, 12 Second

புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர் புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் வில்பத்துப் பகுதியில் 2002ம் ஆண்டு வேட்டைக்குச் சென்றிருந்தபோது புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் இறுதி சண்டையின்போது வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் மீட்கப்பட்ட மலையக சிறுமிகளின் சடலங்கள் தொடர்பில் மர்மங்கள்
Next post திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்து!