புலிகளின் முக்கிய படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கைது
Read Time:1 Minute, 20 Second
விடுதலைப்புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது விடுதலைப்புலிகள் அமைப்பின் கடந்த 19ஆண்டு காலமாக அங்கம் வகித்துவந்த சிரேஷ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் குறித்த விடுதலைப்புலி உறுப்பினர் வெளிநாடு செல்வதற்காக கல்கிஸ்ஸ விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஏழு முக்கிய தாககுதல்களையும் இவர் வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வருவதாக தெரிவிக்கப்படுகிறது கைது செய்யப்பட்ட குறித்த நபரின் உடலில் பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating