15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய கடற்படை வீரர் தலைமறைவு!
Read Time:1 Minute, 26 Second
கடற்படை வீரர் ஒருவர் 15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் ஹக்மன பிரதேசத்திலுள்ள எல்லேபொல என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்கள் பிரத்தியோக வகுப்பொன்றில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவியை காரில் ஏற்றிச் சென்று விடுவதாகக் கூறி ஏற்றிச் சென்ற சந்தேக நபர் ஆசை வார்த்தைகளால் மாணவியை வசப்படுத்தியுள்ளார் எனவும் பின் திஹாகொட பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று வல்லுறவு புரிந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது பாதிப்புக்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார் அவரைக் கைது செய்ய தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்
Average Rating