அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் -சஜித் பிரேமதாஸ
Read Time:1 Minute, 23 Second
அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பல்வேறு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் தென்மாகாணசபையின் தேர்தல்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம்முதல் வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார் தென்மாகாணசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயங்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Average Rating