குற்றத்தடுப்பு பிரிவினரால் பாக்கியசோதி சரவணமுத்து விமான நிலையத்தில் வைத்து கைது
Read Time:1 Minute, 7 Second
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன வெளிநாடொன்றில் இருந்து கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முனைந்தபோது பாக்கியசோதி சரவணமுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரிடம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எதன் அடிப்படையில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டது என்பது குறித்தும் இதுவரை என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன
Average Rating