உரும்பிராய் அச்செழுவில் வெடிச்சம்பவம் சிறுவன் பலி இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் உரும்பிராய் அச்செழுவில் செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு மர்மப்பொருள் ஒன்றை சிறுவர்கள் எடுத்து அதனை உடைக்கமுற்பட்டபோது அது வெடித்ததில் 11வயது சிறுவன் ஒருவர் மரணமானார் ஒரேகுடும்பத்தைச்சேர்ந்த மற்றுமொரு சிறுவனும் சிறுமியும் படுகாயமடைந்தனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தாங்கள் கண்டெடுத்த மர்மப்பொருளை கையில் எடுத்து கல்லில் குத்தி அதனை உடைக்க முற்பட்டபோது அதுவெடித்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது அச்செழு குடியேற்றத்திட்டத்தை சேர்ந்த சிறிவரதன் ரதிகரன் என்ற சிறுவனே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் இறந்த சிறுவனின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர் இந்த சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் சாலினி வயது8 ஜெகதீஸ்வரன் அகிலன் (வயது7 ஆகிய சகோதரர்களே படுகாயமடைந்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating