இன்றுகாலை கைது செய்யப்பட்ட பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின் விடுதலை

Read Time:1 Minute, 22 Second

இன்றுகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இதுதொடர்பில் கருத்துரைத்த பாக்கியசோதி சரவணமுத்து வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய தன்னை ஒருமணிநேரம் வரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார். இலங்கை வரும்பொழுது தன்னை கைது செய்யும்படி கடந்த பெப்ரவரி மாதம் இரகசிய பொலிஸார் அறிவித்தல் விடுத்ததாக கைது செய்தவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார் இந்த நிலையில் தன்னிடம் மேற்கொள்ளப்பட்ட ஒருமணிநேர விசாரணைகளின் பின்னர் விமான நிலைய பொலிஸார் தம்மை விடுவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று பொறுப்பேற்பு
Next post வன்னியில் இருந்துகொண்டு அரசுக்கு எதிரான செய்திகளை வழங்கிய ஐந்தாவது மருத்துவரும் விடுதலை