வன்னியில் இருந்துகொண்டு அரசுக்கு எதிரான செய்திகளை வழங்கிய ஐந்தாவது மருத்துவரும் விடுதலை
Read Time:1 Minute, 20 Second
புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வன்னிப்பகுதி இருந்த காலத்தில் அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் அரசாங்கத்திற்கு இழிவுகளை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி வந்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 5வது தமிழ் மருத்துவரும் நேற்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் பணியாற்றிய டொக்டர் எஸ்.சிவபாலன் நேற்றையதினம் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையத்து 2லட்சம் ரூபா உறுதிப்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு மருத்துவர்களும் கடந்தமாதம் 24ம்திகதி நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating