புலி உறுப்பினர்களில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் -குற்றப்பிரிவு திணைக்களம்
Read Time:1 Minute, 16 Second
யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றத்தடுப்பு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்படும் நான்குபேர் வெளிநாடு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர் இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
One thought on “புலி உறுப்பினர்களில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் -குற்றப்பிரிவு திணைக்களம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
EPDP காசு வேண்டிக்கொண்டு புலிய விடுவித்து விடுகிறது.