ஜப்பான் அமெரிக்கா உள்ளிட்ட இராணுவத்தளபதிகள் இலங்கையிடம் பயிற்சிகளை கோரியுள்ளனர் -இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய
அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் பயிற்சிகளை கோரியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் எவ்வாறு பயங்கரவாதிகளை இல்லாதொழித்தது என்பது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த இராணுவத்தளபதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். ஆசிய பசுபிக் நாடுகளது இராணுவத்தளபதிகள் கலந்துக் கொண்ட விஷேட மாநாட்டில் கலந்துக் கொண்ட போது இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் திகதி முதல் 27ம் திகதிவரையில் இந்தமாநாடு இடம்பெற்றது. இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமைக்காக சகல நாடுகளும் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.