வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து சுமார் 10ஆயிரம்பேர் தப்பிச்சென்றுள்ளனர் -வவுனியா அரசாங்க அதிபர்!
Read Time:1 Minute, 16 Second
வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து சுமார் 10ஆயிரம் பேர்வரை தப்பிச்சென்றுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த தகவலை வெளியிட்ள்ளார் தம்மால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போதே இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த இதுகுறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள மக்களின் தொகை குறைவடைந்தமையை அடுத்து இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்ற பலர் மீண்டும் திரும்பவில்லை அத்துடன் பலர் நிவாரண வாகனங்கள் முகாம்களுக்கு வந்து திரும்பும் போது இலஞ்சம் கொடுத்து தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
Average Rating