போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற இலங்கைர் இருவர் கைது
இளையான்குடி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போட்டிற்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் 2பேர் கைது செய்யப்பட்டனர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தில் இருந்து 2பேர் பாஸ்போட் கேட்டு விண்ணப்பித்தனர் திவாகரன் (வயது22) பால்ராஜ் வயது27 என்ற அந்த2பேரின் முகவரிகளை சரிபாக்க பொலிஸ_க்கு கலெக்டர் உத்தரவிட்டார் இதையடுத்து அந்த 2பேர் குறித்து விசாரிப்பதற்கு இளையான்குடி பொலிஸார் அங்கு சென்றனர் விசாரணையில் இருவரும் அந்த முகவரியில் வசிப்பவர்கள் அல்ல என்பதும் அவர்கள் இலங்கை அகதிகள் என்றும் பொலிஸாருக்கு தெரிய வந்தது இதில் ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் மேட்டூரிலும் வசித்து வருவது தெரிய வந்தது போலி முகவரி கொடுத்து இருவரும் பாஸ்போட் பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து திவாகரன் பால்ராஜ் ஆகியோரை இளையான்குடி பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Average Rating