காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பல கிராமங்களில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேர் கைது
Read Time:1 Minute, 13 Second
காத்தான்குடியில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுராதா மஹிந்தஸ்ரீ தெரிவித்தார். சட்டவிரோத மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்தி மின்உபகரணங்கள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு இலங்கை மின்சாரசபை ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2 thoughts on “காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பல கிராமங்களில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேர் கைது”
Leave a Reply
You must be logged in to post a comment.
dear
sir
we are very sorry to inform you that the news published in your website is very seriously damage the heart of Kattankudy people. So i kindly request you to change your heading correctly as Kattnkudy police division instead of Kattankudy division.
Thank you
Abdul Kayoom
Kattankudy.
காத்தான்குடியில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற
please change