அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக்கூடாது என்கிறார் அமைசச்ர் கருணா!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும் வகையிலான கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார். அநாவசியமான கூற்றுக்களின் மூலம் கிழக்கு மாகாண அரசியலில் குழப்பநிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் தனியார் அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் திட்டம் தமக்கு இல்லை எனவும் சகல சமூகங்களுடனும் இணைந்து செயற்படவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சகல சிறுபான்மை கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating