யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்..!
Read Time:1 Minute, 3 Second
இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு போலியான தகவல்களை வழங்கிய யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ்எல்டர் வெளியிட்டுள்ளார் இடம்பெயர் முகாம்மக்கள் பட்டினியால் உயிரிழப்பதாக அவர் சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தல் உத்தரவினை ரத்துசெய்ய எல்டர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating