மாத்தளை நகரில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடும் அச்சகம் முற்றுகை, ஆவணங்கள் மீட்பு
Read Time:1 Minute, 14 Second
மாத்தளை நகரில் அமைந்துள்ள அச்சகமொன்றில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. இச்சான்றிதழ்களைப் பயன்படுத்தி பலர் வேலை வாய்ப்புக்களைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த அச்சகத்தில் வர்த்தகவியல் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மாத்தளை பொலீஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலீஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்து ஆவணங்களைக் கைப்பற்றியதுடன், அச்சக இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி யாராவது பணியில் சேர்ந்துள்ளார்களா என்பதைக் கண்டறியும் விசாரணைகளையும் பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating