வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வு

Read Time:1 Minute, 59 Second

வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வொன்று வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் சந்திரசிறியின் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது முக்கியகவனம் செலுத்தப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இம்மீளாய்வின்போது எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியாநகரை அண்டியுள்ள கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வினையடுத்து வடமாகாண ஆளுநர் சில கிராமங்களுக்கு விஜயம்செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அவருடன் அதிகாரிகள் குழுவொன்றும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளை புலிகளே காட்டிக் கொடுக்கும் நிலைமைகள்..!
Next post இடம்பெயர்ந்தோர் தொடர்பில் மஹிந்த சமரசிங்கவுடன்; பான்கீ மூன் பேச்சுவார்த்தை