செனல் 4 வெளியிட்ட காட்சிகள் போலியானவை என்பதனை எரிக் சோல்ஹெய்ம் ஒப்புக்கொள்கிறார் -பாதுகாப்புச் செயலர்!
Read Time:1 Minute, 21 Second
செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என்பதனை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அது பொய்யான வீட்யோ என்றும் எரிக் சோல்ஹெயம் குறிப்பிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் சுட்டிக் காட்டியுள்ளார். படையினர் சித்திரவதை மேற்கொள்வதாக வெளியான செய்திகள் ஜோடிக்கப்பட்டவை என்பதனை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய தெரிவித்துள்ளார். செனல்4 தொலைக்காட்சியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், சர்வதேச அமைப்புக்கள் அதுபற்றி விசாரணை நடத்தும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச5 மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating