500தமிழ் யாழ். இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைக்க தீர்மானம்..!
யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்ளில் கடமையாற்றுவதற்காக 500தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் யாழ்மாவட்டத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தமிழில் பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்கள் இடமிருந்து அடுத்தவாரம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர் இந்த நடவடிக்கையின் மூலம் யாழ்மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேலும் சிவில் பாதுகாப்பு விடயங்களைத் தீவிரப்படுத்தவும் முடியும் என யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
Average Rating