500தமிழ் யாழ். இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைக்க தீர்மானம்..!

Read Time:1 Minute, 43 Second

யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்ளில் கடமையாற்றுவதற்காக 500தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் யாழ்மாவட்டத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தமிழில் பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்கள் இடமிருந்து அடுத்தவாரம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர் இந்த நடவடிக்கையின் மூலம் யாழ்மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேலும் சிவில் பாதுகாப்பு விடயங்களைத் தீவிரப்படுத்தவும் முடியும் என யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு!
Next post புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் -ஜாதிக ஹெல உறுமய