புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் -ஜாதிக ஹெல உறுமய
Read Time:1 Minute, 24 Second
வெளிநாடுகளில் தலைதூக்கியிருக்கும் விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக் காட்டியுள்ளது சில மேற்குலக நாடுகளுடன் இணைந்த புலி செயற்பாட்டாளர்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் நோக்கில் புலி செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்து வருவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெறும் ஆதரவு ஆரோக்கியமானதல்ல என கட்சியின் பொதுச்செயலாளர் எல்லாவல்ல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். மேற்குலநாடுகள் புலம்பெயர் தமிழ்மக்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
One thought on “புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் -ஜாதிக ஹெல உறுமய”
Leave a Reply
You must be logged in to post a comment.
Charging that 27 Indian politicians were on the paylist of the banned LTTE, Janata party president Subramanian Swamy on Saturday urged the Central Government of India to appoint a multi-disciplinary monitoring unit headed by the CBI to investigate into the issue.