7200பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்..!
Read Time:1 Minute, 5 Second
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் கௌரவமான முறையில் பதவி விலகுவதற்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவ சேவையிலிருந்து விலகிக் கொள்ளும் நோக்கில் சுமார் 7200பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டரீதியான முறையில் பதவி விலகுவதற்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 14ம் திகதியுடன் நிறைவடைவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார் சேவையிலிருந்து விலகிச் சென்ற போதிலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டரீதியாக சேவையிலிருந்து விலகிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Average Rating