வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல்
Read Time:48 Second
வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலிகளின் நிர்வாக பகுதிக்கு இந்த பெற்றோல் எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் வவுனியா ஓமந்தைப் பகுதியில் 60 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.