காக்கைத்தீவு இராணுவ காவலரண் மீது தாக்குதல்
Read Time:1 Minute, 10 Second
யாழ். காக்கைத்தீவு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண் மீது சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனைக்கோட்டை சந்திப் பகுதியில் உள்ள வீடு அபிவிருத்திப் பகுதியிலிருந்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும் எவரும் இம்மோதலில் படுகாயமடையவில்லை.
வன்னிக்கு இடம்பெயர்ந்துள்ள ஒருவரது வீட்டிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கனகம்புளியடி மற்றும் காங்கேசன்துறை வீதிப் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைப் படையினர் மேற்கொண்டனர். எவரும் கைது செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.