சட்டவிரோதமாக படகில் சென்ற அகதிகளுடன் பிரபல ஆட்கடத்தல்காரரும் உள்ளார் -இந்தோனேசிய அதிகாரிகள் தகவல்
இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 260 இலங்கை அகதிகளுக்கிடையில் நன்கு பரீட்சயமான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரஹாம் லோஹெனாசிபெசி அல்லது கெப்டன் பிரேம் என அழைக்கப்படுகின்ற அவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் 1500பேரை கடத்தியவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவருடன் மேலும் 6மாலுமிகள் இந்தோனேசியாவின் ஜாவாத்தீவில் தடுத்து வைக்கப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கெப்டன் பிரேம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டால் 20வருடங்கள் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே தம்மை கைவிட்டுவிட்டதாக இலங்கை அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிரதிநிதி ஒருவர் வரும்வரையில் தாம் கப்பலில் இருந்து வெளியேறப் போவதில்லை எனவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.
One thought on “சட்டவிரோதமாக படகில் சென்ற அகதிகளுடன் பிரபல ஆட்கடத்தல்காரரும் உள்ளார் -இந்தோனேசிய அதிகாரிகள் தகவல்”
Leave a Reply
You must be logged in to post a comment.
உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.