சட்டவிரோதமாக படகில் சென்ற அகதிகளுடன் பிரபல ஆட்கடத்தல்காரரும் உள்ளார் -இந்தோனேசிய அதிகாரிகள் தகவல்

Read Time:1 Minute, 24 Second

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 260 இலங்கை அகதிகளுக்கிடையில் நன்கு பரீட்சயமான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரஹாம் லோஹெனாசிபெசி அல்லது கெப்டன் பிரேம் என அழைக்கப்படுகின்ற அவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் 1500பேரை கடத்தியவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவருடன் மேலும் 6மாலுமிகள் இந்தோனேசியாவின் ஜாவாத்தீவில் தடுத்து வைக்கப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் கெப்டன் பிரேம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டால் 20வருடங்கள் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே தம்மை கைவிட்டுவிட்டதாக இலங்கை அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிரதிநிதி ஒருவர் வரும்வரையில் தாம் கப்பலில் இருந்து வெளியேறப் போவதில்லை எனவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சட்டவிரோதமாக படகில் சென்ற அகதிகளுடன் பிரபல ஆட்கடத்தல்காரரும் உள்ளார் -இந்தோனேசிய அதிகாரிகள் தகவல்

  1. உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

Leave a Reply

Previous post கனடாவில் தவிக்கும்; படகு மூலம் கனடாவுக்குத் தப்பிவந்த 76 தமிழ்அகதிகள்…
Next post இந்தோனேசியா கடற்பரப்பில் தடுக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் பேசவென ஆஸி பிரதமர் இந்தோனேசியா விஜயம்