14வயதில் கைதான சிறுவன் 29வயது இளைஞராகியும் விசாரணைகள் எதுவுமற்ற நிலையில் சிறையில்

Read Time:1 Minute, 26 Second

14 வயதில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் எவ்வித விசாரணைகளுமின்றி கடந்த 14 வருடங்களாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு 29 வயதாகிறது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தகவல்களை சேகரித்த போது, இந்த அமைப்புக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகள் எதுவுமின்றி பல தமிழ் இளைஞர்கள் கொழும்பிலுள்ள வெலிகடை, களுத்துறை மற்றும் காலியிலுள்ள பூசா ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை (ஜீ.எஸ்.பி பிளஸ்) தொடர்பான விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது
Next post கனடாவில் தவிக்கும்; படகு மூலம் கனடாவுக்குத் தப்பிவந்த 76 தமிழ்அகதிகள்…