கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29தமிழ்இளைஞர்கள் கைது

Read Time:2 Minute, 18 Second

கட்டுநாயக்கா விமானநிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள் இலங்கைப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்த 15ம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோது அவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். அன்றைய நாள் இரவு 10.00மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவ்விளைஞர்களை இலங்கை காவல்துறையினருடன் இயங்கும் பிரிவினரிடம் கைது செய்துள்ளனர். அதேபோன்று கடந்த 16ம் திகதி இலங்கையிலிருந்து பிரி;த்தானியா செல்ல முயன்ற தமிழ் மாணவர்கள் 18பேர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியா மாணவர் விசா பெற்று இவர்கள் அங்குசெல்ல முற்பட்டவேளையிலேயே கைதாகி விசாரணை செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழ்மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஏராளமான புலனாய்வுப் பிரிவினரும் துணை இராணுவக்குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியா கடற்பரப்பில் தடுக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் பேசவென ஆஸி பிரதமர் இந்தோனேசியா விஜயம்
Next post இந்தோனேசியா: படகிலிருந்து வெளியேற இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து மறுப்பு