கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் முறுகல் உக்கிரம்.. குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா! -பிள்ளையான்

Read Time:8 Minute, 11 Second

karuna-girl1_copy1அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம், இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையப் போகிறது. எதிர்வருகின்ற ஆண்டை எதிர்பார்த்து பல தரப்பட்ட அதிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் தான் கடந்த காலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கங்கள் உடைபடுகிற போது இடையில் வெற்றிகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைப் பிடித்து விட்டு கொழும்பில் வாழ்ந்தவர்கள். அவர்கள் விடுதலைப் புலிகளின் பேச்சைக் கேட்டு விட்டுக் கொழும்பில் இருந்தார்கள். இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு சுமுகமான சூழல் உதயமாகியிருக்கின்ற வேளையில் அதனைக் குழப்புகின்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வருகை அமைந்துள்ளது. இது எதிர்காலத்தில் எமக்கு மிகச் சிக்கல்களைக் கொண்டு வரும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் கடந்த காலங்களில் நாம் கூறியுள்ளதைப் போல தமிழரசுக்கட்சியின் செயல் காரணமாகத் தான் இந்த ஆயுதப் போராட்டத்திற்கு ஆரம்பமே ஏற்பட்டது. சிங்களவர்கள் பிழை விட்டார்கள். அதல்ல பிரச்சினை. அதில் ஏற்பட்ட பிரச்சினைகளை உணர்வு ரீதியாகத் தூண்டிப் பேச்சாற்றலின் ஊடாக ஒரு சமூகத்தை மோத விட்டார்கள். இன்று அதேபோன்று வந்திருக்கிறார்கள் திரும்பவும் எமது மக்களை ஏமாற்றி அரசுக்கெதிரானவர்கள் இம்மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி எமது கட்சிக்கும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தி திரும்பவும் தேசியம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தி திரும்பவும் வடக்கு கிழக்கு இணைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரச்சினைகளை உருவாக்கும் ஒரு முயற்சி நடக்கின்றது. இந்தக் கட்டத்தில் எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இவர்கள் கடந்த காலங்களில் செய்தவற்றைச் கூட்டிக்காட்ட வேண்டும். பயப்படாமல் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் சுட்டிக்காட்ட நீங்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மாற்றாக, நீலக்கட்சிக்காரர்களுக்குச் சுட்டிக்காட்டத் karuna-santhiதான் நீங்கள் பயப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். எமது பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் முரளிதரனைப் பற்றி நீங்கள் பயப்படலாம். ஏனென்றால் அவர் காலங்காலமாக ஆயுதத்துடன் இருந்து வந்தவர். ஆயுதத்தை வைத்து மிரட்டக் கூடியவர். இல்லாவிட்டால் போனில் கூட “உனக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா?” என்று கேட்டு மிரட்டும் வல்லமை படைத்தவர். அவர் இப்பொழுது எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறார். அவரைப்பற்றி நான் நிச்சமாகச் சொல்ல வேண்டும். அவர் மாகாண சபையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார் அன்று. அவர் மாகாணசபையைப் பற்றி விமர்சிப்பதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லை. ஏனென்றால், 13வது திருத்தச்சட்டத்தைப் பற்றியே தெரியாத ஒரு மனிதர் அவர். ஏனென்றால் கடந்த காலங்களில் எமது மாகாண ஆளுனர் எங்களுக்கெதிராகச் செயற்படுகிறார் என்று கிழக்கு மாகாண சபையில் இருக்கும் அமைச்சர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எடுக்கின்ற முக்கியமான தீர்மானம் கூட பிழை என்று எங்கேயோ இருந்தவர் வந்து சொன்னவர். இவரது பணி என்னவென்றால் karuna-wineஅவரது வேலை நடக்க வேண்டுமாக இருந்தால் யாரையாவது காக்காய் பிடிப்பார். உங்களுக்குத் தெரியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் “எங்களுடைய ஒரேயொரு தலைவர் தேசியத் தலைவர் தான், அவர் இருக்கும் காலங்களில் நாம் நாட்டைப் பிடித்துத் தருவோம். அவர் இல்லாவிட்டால் இங்கு எதுவுமே இல்லை. அதற்காக நீங்கள் குழந்தைகளைத் தாருங்கள். நாங்கள் ஆயுத ரீதியாகப் போராடி உங்களுக்குத் தமிழீழத்தைப் பெற்றுத் தருவோம். அதனூடாக அபிவிருத்தி செய்வோம்” என்று கூறினார். அவர் பேசிய பேச்சின் ஊடாகக் கிடைத்தது என்ன? மிஞ்சியது கிழக்கு மாகாணத்தில் 46000 விதவைகள். இளைஞர்களைக் கணக்குப் பார்க்க இங்கு யாரிடமும் டயறிகள் இல்லை. இருப்பது கணவனை இழந்த விதவைகள். அதிலும் இருபத்தெட்டாயிரம் பேர் 35 வயதிற்குட்பட்ட திருமணம் முடித்த விதவைகள். அதிலும் பன்னிரண்டாயிரம் விதவைகளுக்கு குறைந்தது மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் யார்? அனைவரும் தமிழர்கள். இவர்களில் சிலர் ஏனைய இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அல்லது பாதுகாப்புப் பிரிவினரால் சுடப்பட்டார்கள். அல்லது மாற்று இயக்கங்களால் சுடப்பட்டிருந்தார்கள். இந்த அழிவுக்கெல்லாம் யார் காரணம்? அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என பிள்ளையான் தெரிவித்தார். Thanks.. Glopeltamil Website

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் முறுகல் உக்கிரம்.. குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா! -பிள்ளையான்

  1. ஏனடா தமிழீழத்தை அளித்தாய் துரோகி .வெறும் காசுக்கும் இளம் பெண்களின்
    உடலுக்கும் .ஆசைபட்டு துரோகம் செய்து விட்டாயே ———– கருணாவே

    இந்த ஆளை நீங்களும் பிற தமிழீழ இணயங்களும் ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும்.
    ஏனடா தமிழீழத்தை அளித்தாய் துரோகி .வெறும் காசுக்கும் இளம் பெண்களின்
    உடலுக்கும் .ஆசைபட்டு துரோகம் செய்து விட்டாயே ———– கருணாவே

    kajan mahadeva says:
    18 October 2009 at 16:37
    இந்த ஆளை நீங்களும் பிற தமிழீழ இணயங்களும் ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும்.
    இப்போது இந்தப் பாவி…சீமானையும் குற்றம் சொல்கிறார்.அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இதைச் செய்தனர்.
    இப்போது இந்தப் பாவி…சீமானையும் குற்றம் சொல்கிறார்.

    இந்தப் பாவி அரசியலுக்கு வந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள்..அவர்களுக்கு இது தான் கதி….(புத்த பிக்குகளை போல..)
    எமக்கு தலைவன் பிரபாகரன் மட்டும் தான்…வேறு எவருக்கும் எம் நெஞ்சத்தில் இடம் இல்லை….

    இந்தப் பாவி அரசியலுக்கு வந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள்..அவர்களுக்கு இது தான் கதி….(புத்த பிக்குகளை போல..)
    எமக்கு தலைவன் பிரபாகரன் மட்டும் தான்…வேறு எவருக்கும் எம் நெஞ்சத்தில் இடம் இல்லை….

  2. at last Mr Cheep Minister found the truth of his former boss when the knife comes to his head the woman minister is no more i repeat once again the contribution of eastern lads to our fredom struggle was immence but all this was wasted when the woman minster devided the east and north and mislead the eastern lads away from the tamil struggle. one can not surpress the aspiration on tamil homeland that consist north and east without that there will be no solutions. You can kill lots of pirabakans but can not kill the struggle.

  3. பிரபாகரன் பிச்சைபோட்ட பணத்தில் வாழ்ந்து வந்த துரோகி இன்று சிங்கள அரசின் பிச்சையில் வாழ நினைத்தவன் இன்று பேசுகிறான்.இவனை கேவலப்படுத்துவரை மதிப்பான். மதிப்பவரை மிதிப்பான். ஒன்றை சொல்லுகிறேன் இந்த ஈழ துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது மிக விரைவில் கடவுள் தண்டனை தருவார் கருணா…நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி: இலங்கை அதிர்ச்சி இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் அந்நாட்டு அரசு அடைத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் 59 தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.

    இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்று வாழ்த்தி உதவுவதுதான். இதனை விரைந்து செய்க! இன்றே செய்க!தமிழ்த் தேசியத் தலைவர மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழ மக்கள் அரசு அமையட்டும்! வாழ்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ் ஈழம்! தமிழர் தாயகம் தரணியில் தலைசிறந்து தழைக்கட்டும்! ஈழ – உலக நாடுகளின் நல்லுறவு வளரட்டும் , தமிழ் ஈழம் அமையட்டும்!

Leave a Reply

Previous post இந்தோனேசியா: படகிலிருந்து வெளியேற இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து மறுப்பு
Next post திருமா “இதை” அங்க சொல்லியிருக்கனும்.. சாமி