இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் -இராணுவப் பேச்சாளர்
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் உலக கோடீஸ்வர வர்த்தகர்களின் ஒருவரான இராஜ் இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கோடீஸ்வர வர்த்தகரான இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். பிரிகேடியர் நாணயக்கார இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு இராஜரட்ணத்தை மிக நீண்ட காலமாகவே கண்காணித்து வருகிறது. இராஜரட்ணம் மிக நீண்டகாலமாகவே புலிகளுக்கு பெருந்தொகையான மில்லியன் டொலர்களை அன்பளிப்புச் செய்து வந்துள்ளார். ஆனால், இலங்கையில் அவரால் நடத்தப்படும் எந்தவொரு கம்பனியும் இதுவரை இலங்கை அரசால் விசாரணைக்கு உட்படுத்தப்படவே இல்லை. இராஜரட்ணத்தின் விடயத்தில் அமெரிக்காவின் தற்போதைய விசாரணைகளின் முடிவுகள் வெளிவரும் வரை இலங்கை அரசு கண்டிப்பாக காத்திருக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இலங்கையில் இராஜரட்ணத்தால் நடத்தப்படும் கம்பனிகள்மூலம் புலிகளுக்கு நிதி அன்பளிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றவா என்று நாம் விசாரணைகளை நடத்துவோம். இந்தக் கம்பனிகள் புலிகளுக்கு நிதி அன்பளிப்புக்கள் மேற்கொண்டிருக்கின்றன என்பதை எம்மால் நிரூபிக்க முடியுமாயின் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating