கிழக்கின் முதலமைச்சராக கற்றறிந்த ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்- முரளிதரன்

Read Time:1 Minute, 42 Second

karuna-pillaiyan-009கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் சாதி வேறுபாட்டை பரப்பி வருவதாக முன்னர் எல்ரிரிஈ இயக்கத்திலும், பின்னர் ரிஎம்விபி யிலும் தனது கூட்டாளியாக இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கம் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். டெயிலி மிரர் பத்திரிகையின் வீடியோ நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய செவ்வியில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நாங்கள் இந்த முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யவேண்டியிருப்பதாக தெரிவித்த அவர் அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் கல்வியறிவுள்ள தலைமைப் பண்புள்ள ஒருவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள இதர முதலமைச்சர்களுடன் ஒப்புநோக்கினால் அவர்கள் கல்வியறிவு நிரம்பியவர்களாகவும் சமூகத்தின் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாகவும் காணப்படுகின்றார்கள் எனவும் அமைச்சர் வி.முரளிதரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “கிழக்கின் முதலமைச்சராக கற்றறிந்த ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்- முரளிதரன்

  1. கருணா (எட்டப்பன், துரோகி, காக்கை வன்னியன், யூதாஸ் போன்ற பெயர்கள்
    அழிந்து கருணா என்ற பெயர் நிலைக்க காரணாமாக இருந்த இன துரோகி).

  2. Karuna was a child terrorist because brainwash of prabhaharan , he had done many murders, but he is now clear and changed mind , he accept one srilanka , so don`t write him like that , praba is a tamil trailor.

  3. தமிழன் சேற்றில் நிற்கிறான் என்று பாரதி சொன்னது நூறு வீதம் உண்மை.

Leave a Reply

Previous post முக்காடு போட்டபடி காவல் நிலையத்தில் கையெழுத்திட புவனேஸ்வரி
Next post கனடாவில் கைதானவர்கள் விசாணைக்காக வன்கூவர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்..