சென்னை கடற்கரையில், கண்ணகி சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்
Read Time:1 Minute, 10 Second
சென்னை கடற்கரையில் மீண்டும் கண்ணகி சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், முன்னர் அகற்றப்பட்டு இப்போது மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு உள்ள கண்ணகி சிலை திறப்பு விழா தமிழக அரசினë சார்பில் நேற்றிரவு நடந்தது.
கண்ணகி சிலை அருகே இதற்காக ஒரு மேடை அமைக்கப்படëடு இருந்தது. கண்ணகி சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டிருந்தது. சிலை முழுவதும் மஞ்சள் துணியால் மூடப்பட்டிருந்தது. மேடையில் இருந்தபடியே முதல்-அமைச்சர் கருணாநிதி பொத்தானை அழுத்தியதும் மஞ்சள் துணி விலகி கண்ணகி சிலை கம்பீரமாக காட்சி அளித்தது. சிலை திறக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.